அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடந்த நாட்டைக் கட்டியெழுப்பும் சவால்மிக்க இலக்கை நோக்கிய சரியான பாதையை நாம் அடைந்துள்ளோம். கடந்த ஈராண்டுகளில் எமது நாடு அடைந்துள்ள முன்னேற்றமே அதற்கான சான்று. இப் பயணத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதன் மூலமே இதற்காக நாம் அனைவரும் செய்த தியாகங்களின் பெறுபேற்றை எமது எதிர்கால சந்ததிக்கு உரித்தாக்க முடியும். சரியான பாதையில் தொடர்ந்தும் முன்னோக்கிப் பயணிப்பதற்காகவே நான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளராக முன்வந்துள்ளேன். எனவே நாட்டைக் கட்டியெழுப்பும் எனது திட்டங்களுக்கும் தொலைநோக்கிற்கும் உங்களுடைய ஆதரவைக் கோருகின்றேன்.
உங்கள் ஆதரவின் வலிமையோடு இந்தச் சிரமங்களைக் கடந்து வளர்ச்சியடைந்த இராச்சியமாக இலங்கையை உயர்த்த முடியும். அபிவிருத்தி என்னும் அறுவடையால் தேசத்தின் அனைத்து மக்களையும் சுபீட்சமடையச் செய்ய முடியும். எனவே, எமது அபிமானமிக்க தாய்நாட்டின் அனைத்து மக்களுக்கும் மீண்டும் சுபீட்சத்தை உருவாக்குகின்ற முன்னோக்கிய பயணத்தில் கைகோர்த்துக் கொள்ளுமாறு அனைவரிடமும் கோருகின்றேன்.